Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2398 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2398நான்முகன் திருவந்தாதி || நம்மளவே அன்று -எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது- ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும்படியை -என்கிறார்- 17
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு.
மெய் தவத்தோன்,Mei Thavaththon - மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன், (- (உரைத்தான் உபதேசித்தான்.))
ஞாலம் அளந்தானை,Njaalam Alandhaanai - உலகளந்தவனும்
ஆழி அளந்தானை,Aazhi Alandhaanai - க்ஷீராப்திசாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை,Aal Mel Valarnthaanai - ஆலிலே மேல் வளர்ந்தவனுமான பெரானை
தான் வணங்கும் ஆறு,Thaan Vanangum Aaru - தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை,Aram Neriyai - நல்வழியை
மேலை யுகத்து,Melai Yugaththu - முன்யுகத்திலே
ஆல நிழல்கீழ்,Aal Nizhalkeezh - ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு,Naalvarkku - நான்கு மஹர்ஷிகளுக்கு