திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2399 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2399நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணத்திலும் ஸ்ரீ பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்- குறி கொண்டு ஸ்ரீ பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரீயது என்கிறார் – 18
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு கூறாகக் கீறிய கோளரியை, – வேறாக ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச் சார்த்தி யிருப்பார் தவம்.
பதவுரை Show / Hide
மாறு ஆய,Maaru Aaya - எதிரிட்டு நின்ற (- (பெருமிடுக்கனான நரசிங்க மூர்த்தியை))
தானவனை,Thaanavanai - ஹிரண்யாஸுரனுடைய
மார்வு,Maarvu - மார்வை
வள் உகிரால்,Val Ukiraal - கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய,Irandu Koordu Aaga Seeriyah - இருபிளவாகப் பிளந்த
கோள்,Kol - அரியை
வேறு ஆக,Veeru Aaga - விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை,Aethi Iruppaarai - துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே,Mattru Avarai Saathi Iruppaar Thavam Vellume - அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்.