Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2400 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2400நான்முகன் திருவந்தாதி || எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்- ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் – ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷ பாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்- பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார் 19
தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ.
தவம் செய்து,Thavam Seidhu - தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்,Naanmuganaal - பிரமனிடத்து
பெற்ற,Petra - (ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை,Varaththai - வரங்களை
அவம் செய்த,Avam Seidha - பழுதாக்கின
ஆழியாய்,Aazhiyaai - திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை,Emmai - அடியோங்களை
உவந்து,Uvandu - திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே,Kaappai Nee Andrae - காத்தருள்பவன் நீயேயன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே,Kaappadhanai Aavaai Nee Andrae - காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீயன்றோ,
எவ் உயிர்க்கும்,Ev Uyirkkum - (உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தை
ஈப்பாயும்,Eippaayum - அளிப்பவனும்
நீ அன்றே,Nee Andrae - நீயன்றோ.