| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2400 | நான்முகன் திருவந்தாதி || எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்- ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் – ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷ பாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்- பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார் 19 | தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம்செய்த ஆழியா யன்றே,- உவந்தெம்மைக் காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம் ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ. | தவம் செய்து,Thavam Seidhu - தபஸ்ஸை அநுஷ்டித்து நான்முகனால்,Naanmuganaal - பிரமனிடத்து பெற்ற,Petra - (ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட வரத்தை,Varaththai - வரங்களை அவம் செய்த,Avam Seidha - பழுதாக்கின ஆழியாய்,Aazhiyaai - திருவாழிக் கையனான பெருமானே! எம்மை,Emmai - அடியோங்களை உவந்து,Uvandu - திருவுள்ளமுகந்து காப்பாய் நீ அன்றே,Kaappai Nee Andrae - காத்தருள்பவன் நீயேயன்றோ, காப்பதனை ஆவாய் நீ அன்றே,Kaappadhanai Aavaai Nee Andrae - காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீயன்றோ, எவ் உயிர்க்கும்,Ev Uyirkkum - (உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும் வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தை ஈப்பாயும்,Eippaayum - அளிப்பவனும் நீ அன்றே,Nee Andrae - நீயன்றோ. |