| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2401 | நான்முகன் திருவந்தாதி || இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் – நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ – ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் – பிரித்து சொல்லுகிறது என்- அக்நியும்-குல பர்வதங்களும்-எட்டுத் திக்கும்-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான- இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்- 20 | நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும் நீயே தவத்தேவ தேவனும் – நீயே எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் திருசுடரு மாய இவை, | உலகு எல்லாம் நீயே,Ulaku Ellam Neeye - உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே, நிற்பனவும்,Nirpanavum - உலகங்கள் ஸத்தைபெற்று நிற்பதும் நின் அருளே,Nin Arule - உனது கிருபையினாலேயாம், தவம் தேர் தேவனும் நீயே,Thavam Ther Devanum Neeye - தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே, எரி சுடரும்,Eri Sudarum - ஜவுலிக்கின்ற அக்நியும் மால்வரையும்,Maalvaraiyum - பெரியகுலபர்வதங்களும் எண் திசையும்,En Thisaiyum - எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும் அண்டத்து,Andaththu - ஆகாசத்திலுள்ள இரு சுடரும்,Iru Sudarum - சந்த்ர ஸூர்யர்களும் ஆய இவை,Aaya Ivai - ஆகிய இவையெல்லாம் நீயே,Neeye - நீயேகாண். |