Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2401 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2401நான்முகன் திருவந்தாதி || இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் – நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ – ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் – பிரித்து சொல்லுகிறது என்- அக்நியும்-குல பர்வதங்களும்-எட்டுத் திக்கும்-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான- இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்- 20
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் – நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை,
உலகு எல்லாம் நீயே,Ulaku Ellam Neeye - உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்,Nirpanavum - உலகங்கள் ஸத்தைபெற்று நிற்பதும்
நின் அருளே,Nin Arule - உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே,Thavam Ther Devanum Neeye - தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்,Eri Sudarum - ஜவுலிக்கின்ற அக்நியும்
மால்வரையும்,Maalvaraiyum - பெரியகுலபர்வதங்களும்
எண் திசையும்,En Thisaiyum - எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து,Andaththu - ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்,Iru Sudarum - சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை,Aaya Ivai - ஆகிய இவையெல்லாம்
நீயே,Neeye - நீயேகாண்.