திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2401 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2401நான்முகன் திருவந்தாதி || இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் – நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ – ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் – பிரித்து சொல்லுகிறது என்- அக்நியும்-குல பர்வதங்களும்-எட்டுத் திக்கும்-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான- இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்- 20
நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும் நீயே தவத்தேவ தேவனும் – நீயே எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத் திருசுடரு மாய இவை,
பதவுரை Show / Hide
உலகு எல்லாம் நீயே,Ulaku Ellam Neeye - உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்,Nirpanavum - உலகங்கள் ஸத்தைபெற்று நிற்பதும்
நின் அருளே,Nin Arule - உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே,Thavam Ther Devanum Neeye - தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்,Eri Sudarum - ஜவுலிக்கின்ற அக்நியும்
மால்வரையும்,Maalvaraiyum - பெரியகுலபர்வதங்களும்
எண் திசையும்,En Thisaiyum - எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து,Andaththu - ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்,Iru Sudarum - சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை,Aaya Ivai - ஆகிய இவையெல்லாம்
நீயே,Neeye - நீயேகாண்.