Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2402 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2402நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின ஸ்ரீ எம்பெருமானுடைய சீற்றத்தையும்- அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் – இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது – ஸ்ரீ நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் – 21
இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் – இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு.
திறந்து,Thirandhu - விரிந்து
எரி கான்ற,Eri Kaandru - நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்,Pilaam Vaai - பாழி போன்ற பெரியவாய்
இவையா,Ivaiyaa - இதுவோ!
எரி வட்டம்,Eri Vattam - கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்,Kangkal - திருக்கண்கள்
இவையா,Ivaiyaa - இவையோ!
எரி,Eri - அக்நிபோலே
பொங்கி,Pongi - கிளர்ந்து
காட்டும்,Kaattum - தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்,Imaiyor Perumaan - நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன்
அரி,Ari - நரசிங்கமூர்த்தியாய்
பொங்கி,Pongi - கிளர்ந்து
காட்டும்,Kaattum - காட்டின
அழகு,Azhagu - அழகு
இவையா,Ivaiyaa - என்ன விஷயம்!