திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2403 | நான்முகன் திருவந்தாதி || ஆன பின்பு சர்வ காரணமான ஸ்ரீ நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் – ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது – 22 | அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து. | பதவுரை Show / Hideதான் ஏழ் உலகுக்கும் வித்து,Thaan Ezh Ulakukkum Viththu - தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய் தன்மையவன்,Thanmaiyavan - ஆச்ரயபூதனாய் குழவி ஆய்,Kuzhavi Aay - (பிரளய காலத்தில்) சிறுகுழந்தையாய்க் கொண்டும் மீன் ஆய்,Meen Aay - (பின்பொருகால்) மத்ஸ்யரூபியாய்க் கொண்டும் உயிர் அளிக்கும்,Uyir Alikkum - ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான தானே,Thaane - எம்பெருமான் தானே தன்மைக்கும்,Thanmaikkum - (ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும் அரி உருவன்,Ari Uruvan - நரசிங்கவுருக் கொண்டவன் தானே அழகியான்,Thaane Azhagiyan - அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே பழகியான்,Pazhagiyan - புராயபுருஷனாகிய அப்பெருமானுடைய தாளே,Thale - திருவடிகளையே பணிமின்,Panimin - ஆச்ரயியுங்கோள் |