திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2403 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2403நான்முகன் திருவந்தாதி || ஆன பின்பு சர்வ காரணமான ஸ்ரீ நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் – ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது – 22
அழகியான் தானே அரியுருவன் தானே பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த் தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே மீனா யுயிரளிக்கும் வித்து.
பதவுரை Show / Hide
தான் ஏழ் உலகுக்கும் வித்து,Thaan Ezh Ulakukkum Viththu - தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்,Thanmaiyavan - ஆச்ரயபூதனாய்
குழவி ஆய்,Kuzhavi Aay - (பிரளய காலத்தில்) சிறுகுழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்,Meen Aay - (பின்பொருகால்) மத்ஸ்யரூபியாய்க் கொண்டும்
உயிர் அளிக்கும்,Uyir Alikkum - ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே,Thaane - எம்பெருமான் தானே
தன்மைக்கும்,Thanmaikkum - (ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்,Ari Uruvan - நரசிங்கவுருக் கொண்டவன்
தானே அழகியான்,Thaane Azhagiyan - அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்,Pazhagiyan - புராயபுருஷனாகிய அப்பெருமானுடைய
தாளே,Thale - திருவடிகளையே
பணிமின்,Panimin - ஆச்ரயியுங்கோள்