| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2404 | நான்முகன் திருவந்தாதி || அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில் அவை எல்லாவற்றையும் ஸ்ரீ எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்– அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூஹ்ருதம் உண்டோ – சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்- இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் – 23 | வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த பத்தி யுழவன் பழம்புனத்து, – மொய்த்தெழுந்த கார்மேக மன்ன கருமால் திருமேனி, நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. | விடை அடர்த்த,Vidai Adartha - (நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும் (- (நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்) (போலிகண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.)) பத்தி உழவன்,Pathi Uzhuvan - (தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய பழம் புனத்து,Pazham Punathu - (ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே வித்தும் இட வேண்டும் கொலோ,Viththum Ida Vendum Kolo - (ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா) மொய்த்து எழுந்த,Moydhu Ezhuntha - திரண்டு கிளர்ந்த கார் மேகம் அன்ன,Kaar Megam Anna - காளமேகம் போன்ற கரு மால்,Karum Maal - கரிய திருமாலினது திரு மேனி,Thiru Meeni - திருமேனியை நீர் வானம்,Neer Vaanam - நீர்கொண்டெழுந்த மேகமானது நிகழ்ந்து,Nigazhndhu - எதிரேநின்று காட்டும்,Kaattum - காண்பிக்கும் |