Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2404 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2404நான்முகன் திருவந்தாதி || அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில் அவை எல்லாவற்றையும் ஸ்ரீ எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்– அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூஹ்ருதம் உண்டோ – சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்- இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் – 23
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, – மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
விடை அடர்த்த,Vidai Adartha - (நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும் (- (நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்) (போலிகண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.))
பத்தி உழவன்,Pathi Uzhuvan - (தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து,Pazham Punathu - (ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ,Viththum Ida Vendum Kolo - (ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
மொய்த்து எழுந்த,Moydhu Ezhuntha - திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன,Kaar Megam Anna - காளமேகம் போன்ற
கரு மால்,Karum Maal - கரிய திருமாலினது
திரு மேனி,Thiru Meeni - திருமேனியை
நீர் வானம்,Neer Vaanam - நீர்கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து,Nigazhndhu - எதிரேநின்று
காட்டும்,Kaattum - காண்பிக்கும்