திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2405 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2405நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் – நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து- அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்- 24
நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் – புகழ்ந்தாய் சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய் மனப்போர் முடிக்கும் வகை.
பதவுரை Show / Hide
பால் பொன் பசுப்பு கார் நான்கு வண்ணமும்,Paal Pon Pasuppu Kaar Naanthu Vannamum - வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு
நிகழ்ந்தாய்,Nigazhndhai - (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய்
இருவரையும்,Irivaraikum - மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள்
வீய,Veeya - தொலையும்படி
இகழ்ந்தாய்,Ikazhndhai - வெறுத்தாய்
சேனாபதி ஆய்,Senapathi Aay - அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
மனம்,Manam - த்ரௌபதியின் கூந்தலை முடிப்பிக்க வேணுமென்று) மநோரதங் கொண்டிருந்த படியே
போர்,Por - பாரதயுத்தம்
முடிக்கும் வகை,Mudikkum Vagai - தலைக்கட்டும்படி
சினம் போர் சுவேதனை,Sinam Por Suvedhanai - சீறிக்கொண்டு யுத்தத்தில் இழியும் ஆண்புலியான அர்ஜுன்னை
புகழ்ந்தாய்,Pugazhndhai - கொண்டாடினாய்