திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2406 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2406நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் – ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார் 25
வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும் வகையால் வருவதொன் றுண்டே, வகையால் வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும் வயிர வழக்கொழித்தாய் மற்று.
பதவுரை Show / Hide
மதியாது,Madhiyadhu - உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்,Vagaiyal - நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்,Man Kondaai - (மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டாய்
மற்றும்,Mattrum - அதற்குமேலும்,
வயிரம்,Vayiram - வயிரமாகிற ரத்னத்தை
வகையால்,Vagaiyal - ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து,Kuzhaithu - இளகச்செய்து
உண்ணும்,Unnum - உண்பவனும்
தான் என்னும்,Thaan Ennum - தனக்கு மேற்பட்ட பலிஷ்டா ஆருமில்லையென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி,Mavali - மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு,Vayiram Vazhakku - சத்ருத்வமுறையை
ஒழித்தாய்,Ozhiththai - போக்கினாய்
வகையால்,Vagaiyal - இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே,Varuvadhu Ondru Unde - உனக்கு ஸித்திப்பதொருபலன் உண்டோ? (எல்லாம் ஆச்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.