| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2406 | நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் – ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார் 25 | வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும் வகையால் வருவதொன் றுண்டே, வகையால் வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும் வயிர வழக்கொழித்தாய் மற்று. | மதியாது,Madhiyadhu - உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல் வகையால்,Vagaiyal - நல்ல உபாயங்களாலே மண் கொண்டாய்,Man Kondaai - (மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டாய் மற்றும்,Mattrum - அதற்குமேலும், வயிரம்,Vayiram - வயிரமாகிற ரத்னத்தை வகையால்,Vagaiyal - ஔஷதாதி உபாயங்களாலே குழைத்து,Kuzhaithu - இளகச்செய்து உண்ணும்,Unnum - உண்பவனும் தான் என்னும்,Thaan Ennum - தனக்கு மேற்பட்ட பலிஷ்டா ஆருமில்லையென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான மாவலி,Mavali - மஹாபலியினுடைய வயிரம் வழக்கு,Vayiram Vazhakku - சத்ருத்வமுறையை ஒழித்தாய்,Ozhiththai - போக்கினாய் வகையால்,Vagaiyal - இப்படிப்பட்ட உனது காரியங்களினால் வருவது ஒன்று உண்டே,Varuvadhu Ondru Unde - உனக்கு ஸித்திப்பதொருபலன் உண்டோ? (எல்லாம் ஆச்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை. |