திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2407 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2407நான்முகன் திருவந்தாதி || இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று அவன் படியை வெளியிடுகிறார்- ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் – 26
மற்றுத் தொழுவா ரொருவ ரையும் யானின்மை, கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும் கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக் கண்டுகொள் கிற்கு மாறு.
பதவுரை Show / Hide
கடன் வண்ணா,Kadan Vannaa - கடல்போன்ற திருநிறமுடைய பெருமானை!
யானை தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை,Yaanai Thozhuvaar Mattru Oruvaraiyum Inmai - அடியேனால் ஆச்ரயிக்கப்படும் தெய்வம் (நீதவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்,Kattrai Sadaiyaan - சேர்த்துக்கட்டின ஜடையையுடையனான ருத்ரன்
கரி கண்டாய்,Kari Kandaai - ஸாக்ஷிகாண்
யான்,Yaan - இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை,Unnai - உன்னை
எற்றைக்கும்,Ettraikkum - எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு,Kandu Kolgirkkum Aaru - ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டுகொள்,Kandukol - கடாக்ஷித்தருள வேணும்.