| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2407 | நான்முகன் திருவந்தாதி || இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று அவன் படியை வெளியிடுகிறார்- ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் – 26 | மற்றுத் தொழுவா ரொருவ ரையும் யானின்மை, கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும் கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக் கண்டுகொள் கிற்கு மாறு. | கடன் வண்ணா,Kadan Vannaa - கடல்போன்ற திருநிறமுடைய பெருமானை! யானை தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை,Yaanai Thozhuvaar Mattru Oruvaraiyum Inmai - அடியேனால் ஆச்ரயிக்கப்படும் தெய்வம் (நீதவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில் கற்றை சடையான்,Kattrai Sadaiyaan - சேர்த்துக்கட்டின ஜடையையுடையனான ருத்ரன் கரி கண்டாய்,Kari Kandaai - ஸாக்ஷிகாண் யான்,Yaan - இப்படி அநந்ய பக்தனை அடியேன் உன்னை,Unnai - உன்னை எற்றைக்கும்,Ettraikkum - எந்நாளும் கண்டு கொள்கிற்கும் ஆறு,Kandu Kolgirkkum Aaru - ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி கண்டுகொள்,Kandukol - கடாக்ஷித்தருள வேணும். |