திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2408 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2408நான்முகன் திருவந்தாதி || எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்- பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் 27
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும் பேறாகக் கொள்வனோ பேதைகாள் – நீறாடி தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை யான்காண வல்லேற் கிது.
பதவுரை Show / Hide
பேதைகான்,Pethaikaan - மூடர்களை!,
மால்,Maal - எம்பெருமான்
தான் புகுந்த,Thaan Pugundha - தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்,Mada Nenjam - (எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்,Mattrathuvum - வேறொன்றை
பேறு ஆக,Peru Aaga - புருஷார்த்தமாக
கொள்வனோ,Kolvano - நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்,Neeradi Thaan - நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத,Kaan Maattadha - ஸேவிக்க முடியாததும்
தார்,Thaar - புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும்
அகலம்,Agalam - போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை,Sae Adiyai - திருவடியை
யான் காண வல்லேற்கு,Yaan Kaan Valleerku - ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது,Idhu - இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.