Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2408 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2408நான்முகன் திருவந்தாதி || எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்- பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் 27
மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள் – நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது.
பேதைகான்,Pethaikaan - மூடர்களை!,
மால்,Maal - எம்பெருமான்
தான் புகுந்த,Thaan Pugundha - தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்,Mada Nenjam - (எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்,Mattrathuvum - வேறொன்றை
பேறு ஆக,Peru Aaga - புருஷார்த்தமாக
கொள்வனோ,Kolvano - நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்,Neeradi Thaan - நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத,Kaan Maattadha - ஸேவிக்க முடியாததும்
தார்,Thaar - புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும்
அகலம்,Agalam - போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை,Sae Adiyai - திருவடியை
யான் காண வல்லேற்கு,Yaan Kaan Valleerku - ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது,Idhu - இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.