| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2408 | நான்முகன் திருவந்தாதி || எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்- பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் 27 | மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும் பேறாகக் கொள்வனோ பேதைகாள் – நீறாடி தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை யான்காண வல்லேற் கிது. | பேதைகான்,Pethaikaan - மூடர்களை!, மால்,Maal - எம்பெருமான் தான் புகுந்த,Thaan Pugundha - தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற மட நெஞ்சம்,Mada Nenjam - (எனது) விதேயமான நெஞ்சிலே மற்றதுவும்,Mattrathuvum - வேறொன்றை பேறு ஆக,Peru Aaga - புருஷார்த்தமாக கொள்வனோ,Kolvano - நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்) நீறாடி தான்,Neeradi Thaan - நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும் காண மாட்டாத,Kaan Maattadha - ஸேவிக்க முடியாததும் தார்,Thaar - புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும் அகலம்,Agalam - போக்யதையில் அளவிறந்ததுமான சே அடியை,Sae Adiyai - திருவடியை யான் காண வல்லேற்கு,Yaan Kaan Valleerku - ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு இது,Idhu - இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று. |