| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2409 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பிராட்டி யோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்- அவன் லீலை-வாலியைக் கொன்ற ஜயமும்-ராவண வதமும் புத்திஸ்தமான படியிலே இது என்கிறார் – ஒரு முஷ்டியிலே நின்று எய்ய-நெஞ்சு அழியும்படி யாய் இறே இருப்பது இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்- 28 | இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது, இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, – இதுவிலங்கை தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை, ஊனொடுங்க எய்தான் உகப்பு. | இலங்கை,Ilankai - லங்காபுரியானது ஈடு அழிய,Eedu Azhiya - சீர்குலையும் படியாக கட்டிய,Kattiya - (வானர சேனையைத் துணைகொண்டு) கட்டின சேது,Sethu - திருவணை இது,Idhu - இதுகாண்மின், விலங்கு,Vilangku - திர்யக்யோநியிற் பிறந்தவனான வாலியை,Vaaliyai - வாலியை வீழ்த்தது,Veelththathu - முடித்தது எய்தான்,Eydhaan - அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய இது,Idhu - இப்போது நடந்த செயல்காண்மின், இலங்கை தான்,Ilankai Thaan - லங்காபுரியானது ஒடுங்க,Odunga - அழியும்படியாகவும் வில் நுடங்க,Vil Nudanga - சார்ங்கலில் வளையும் படியாகவும், தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க,Than Thaar Iraavanai Oon Odunga - (அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலையணிந்து கொண்டிருந்த இராவணனுடைய உடல் ஒழியும்படியாகவும் உகப்பு,Ugappu - விலையான வியாபாரம் இது,Idhu - இது காண்மின் |