Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2410 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2410நான்முகன் திருவந்தாதி || ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே- தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார் ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு தேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் – மதிக்கில் இவனுடைய திரு மேனியை-ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை – 29
உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், – மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன்.
மிக,Miga - மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்,Puruvam Ondruk Konru Osanaiyaan - ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன்
வீழ,Veel - ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு,Andrik Kondo - சீறிக்கொண்டு
ஒரு கணையால்,Oru Kanaiyaal - ஒரு பாணத்தினால்
எய்தானவன்,Eydhaanavan - அடித்து முடித்தவனான இராமபிரானை
மதிக்கில்,Mathikkil - சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே,Ugappu Uruvan Thaane - மநோஹரமான திருமேனியையுடையவன் அவனே
ஒளி உருவன் தானே,Oli Uruvan Thaane - தேஜோமயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே,Makappu Uruvan Thaane - மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே.