Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2411 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2411நான்முகன் திருவந்தாதி || அப்பேர் அழகோடு -ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன் – என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் -அவ்வளவு அன்றிக்கே நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான் இனி ஸ்ரீ திருப் பாற் கடலில் ஸ்ரீ திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை -என்கிறார்- என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று- என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு ஸ்ரீ திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ – 30
அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல்.
என்னை ஆளி,Ennai Aali - என்னை ஆட்கொண்டருள்பவனான (- (ஆன பின்பு இனி) (பொருந்தமாட்டான்.))
அரங்கத்து அவன்,Arangathu Avan - ஸ்ரீரங்கநாதன்
என்னை,Ennai - என்னை
அரங்கில்,Arangil - ஸம்ஸாரமாகிற நாடகசாலையில்
எய்தாமல்,Eydhamal - பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்,Kaappaan - காத்தருள்வன்,
அவன்,Avan - அப்பெருமான்
என்னது,Ennathu - என்னுடைய
உள்ளத்து,Ullathu - நெஞ்சிலே
நின்றான் இருந்தான்,Nindraan Irundhaan - நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
அவன்,Avan - அப்பெருமான்
வெள்ளத்து,Vellathu - திருப்பாற்கடலில்
அரவு,Aravu - அப்பெருமான்
வெள்ளத்து,Vellathu - திருப்பாற்கடலில்
அரவு அணையின் மேல்,Aravu Anaiyin Mel - சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே,Kidakkume - பொருந்துவனோ?