| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2412 | நான்முகன் திருவந்தாதி || எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் ஸ்ரீ எம்பெருமானேயான பின்பு-அபரிமித துக்க பாக்குகளான பூமியில் உள்ளார் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் – நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்- அவனை அன்றோ பற்ற அடுப்பது -என்கிறார் – 31 | மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம் தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர் பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும் கருமாயம் பேசில் கதை. | மேல்,Mel - முன்பொருகால் (- (வாழ்த்தமாட்டாத)) நான்முகன்,Naanmugan - பிரமன் அரணை,Aranai - ருத்ரனைக்குறித்து இட்ட,Itta - கொடுத்த விடுசாபம்,Vidusaapam - சாபத்தை தாரகையுள்,Thaarakaiyul - இந்நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய) நாராயணன்தான்,Naarayananthaan - எம்பெருமானே ஒழித்தான்,Ozhiththaan - போக்கிருயளினன், (அப்படிப்பட்ட) வானோர் பெருமானை,Vaanor Perumaanai - நித்யஸூரி நாதனான ஸ்ரீமந்நாராயணனை ஏத்தாத,Aeththaadha - வாய்கொண்டு பேய்காள்,Peykaal - அறிவு கேடர்களே! பிறக்கும் கரு,Pirakkum Karu - பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக்கூடிய) மாயம்,Maayam - ஆச்சரியமான துக்கங்களை பேசில்,Pesil - சொல்லப்புகுந்தால் கதை,Kathai - ஒரு மஹாபாரதம் போலே பரந்திருக்கும். |