Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2412 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2412நான்முகன் திருவந்தாதி || எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் ஸ்ரீ எம்பெருமானேயான பின்பு-அபரிமித துக்க பாக்குகளான பூமியில் உள்ளார் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் – நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்- அவனை அன்றோ பற்ற அடுப்பது -என்கிறார் – 31
மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை.
மேல்,Mel - முன்பொருகால் (- (வாழ்த்தமாட்டாத))
நான்முகன்,Naanmugan - பிரமன்
அரணை,Aranai - ருத்ரனைக்குறித்து
இட்ட,Itta - கொடுத்த
விடுசாபம்,Vidusaapam - சாபத்தை
தாரகையுள்,Thaarakaiyul - இந்நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன்தான்,Naarayananthaan - எம்பெருமானே
ஒழித்தான்,Ozhiththaan - போக்கிருயளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை,Vaanor Perumaanai - நித்யஸூரி நாதனான ஸ்ரீமந்நாராயணனை
ஏத்தாத,Aeththaadha - வாய்கொண்டு
பேய்காள்,Peykaal - அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு,Pirakkum Karu - பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக்கூடிய)
மாயம்,Maayam - ஆச்சரியமான துக்கங்களை
பேசில்,Pesil - சொல்லப்புகுந்தால்
கதை,Kathai - ஒரு மஹாபாரதம் போலே பரந்திருக்கும்.