திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2413 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2413நான்முகன் திருவந்தாதி || அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் – ஆன பின்பு -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் – ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன – ஒரு நொடி மாதரம் போது போக்கு இன்றி-ஆச்சர்ய குணத்தில் அகப்படாதது பரஹிம்சை ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்– 32
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள உதைப்பளவு போதுபோக் கின்றி, – வதைப் பொருள்தான் வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ ஆய்ந்த குணத்தான் அடி.
பதவுரை Show / Hide
கதை பொருள்தான்,Kathai Porulthaan - (உலகத்தில்) உயவஹரிக்கப்டுகின்ற பொருள்கள் யாவும் (- (அப்படிப்பட்ட எம்பெருமானுடைய))
உதைப்பு அளவு போது போக்கு இன்றி,Uthaippu Alavu Podhu Pookku Inri - ஒரு நிமிஷகாலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள,Thiru Vayittrin Ulla - ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
வாய்ந்த குணத்து,Vaayndha Gunaththu - திருக்கல்யாண குணங்களில்
படாதது,Padaadhadhu - ஈடுபடாத வஸ்து
வதை பொருள்தான்,Vadhai Porulthaan - அபதார்த்தமே யாகும்,
ஆய்ந்த குணத்தான்,Aayndha Gunaththaan - சிறந்த திருக்குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி,Adi - திருவடிகளை
அடைமின்,Adaimin - ஆச்ரயியுங்கோள்