Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2414 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2414நான்முகன் திருவந்தாதி || தாம் ஸ்ரீ கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் – அசாதாரணையான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க விரோதியைப் போக்குமவன் என்கிறார் – 33
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு – வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு.
குறிப்பு,Kurippu - (அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால் (- (எம்பெருமான்))
அடி,Adi - திருவடியாலே
சகடம்,Sakadam - சகடாஸுரனை
சாடி,Saadi - ஒழித்தும்
அரவு,Aravu - காளியநாகத்தை
ஆட்டி,Aatti - வாலைப்பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை,Yaanai - குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து,Pidiththu - பற்றிக்கொண்டு
பின்னைக்கா,Pinnaikka - நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு,Val Eru - கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து,Eruththu - முசுப்பை
ஒசித்து,Osiththu - கொம்பை முறித்தொழித்தும்
பேய்,Pei - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை,Mulai - முலையில் தடவியிருந்த
நஞ்சு,Nanju - விஷத்தை
உண்டு,Undu - அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி,Vadi Pavalam Vaai Tholi - அழகிய பவளம் போன்றவாயையும் தோளையும்டையளான
இறுத்து,Iruththu - முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்,Pinnum Ko Aanaan - தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலைநிறுத்திக் கொண்டான்.