Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2415 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2415நான்முகன் திருவந்தாதி || என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் – உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் – 34
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்.
கோட்டியூர் மேயானை,Kottiyoor Meyaanai - திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை,Vengadathu Meyaanai - திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த,Aetha - துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு,Enakku Kurippu - எனக்கு ஆசை
நன்மை பயக்க,Nanmai Payakka - (எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு,Enakku Kurippu - எனக்கு குதூஹலம்,
மெய் வினை,Mei Vinai - சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்,Noi - வியாதிகளும்
எய்தாமல்,Eydhamal - வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான,Thaan Kadaththum Thanmaiyana - தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தான்,Thaan - திருவடிகளை
வெறுப்பனோ,Veruppano - மறந்திருப்பனோ.