| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2415 | நான்முகன் திருவந்தாதி || என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் – உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் – 34 | குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த, குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல், தான்கடத்தும் தன்மையான் தாள். | கோட்டியூர் மேயானை,Kottiyoor Meyaanai - திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும் வேங்கடத்து மேயானை,Vengadathu Meyaanai - திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை ஏத்த,Aetha - துதிப்பதற்கு எனக்கு குறிப்பு,Enakku Kurippu - எனக்கு ஆசை நன்மை பயக்க,Nanmai Payakka - (எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு எனக்கு குறிப்பு,Enakku Kurippu - எனக்கு குதூஹலம், மெய் வினை,Mei Vinai - சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும் நோய்,Noi - வியாதிகளும் எய்தாமல்,Eydhamal - வந்து சேராதபடி தான் கடத்தும் தன்மையான,Thaan Kadaththum Thanmaiyana - தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய தான்,Thaan - திருவடிகளை வெறுப்பனோ,Veruppano - மறந்திருப்பனோ. |