| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2416 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு இது ஸ்ரீ திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் – லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ -என்கிறார்- 35 | தாளால் உலகம் அளந்த அசைவேகொல், வாளா கிடந்தருளும் வாய்திறவான், – நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்தலைவாய் நாகத் தணை. | நீன் ஓதம்,Neen Otham - பெரிய அலைகள் (- (இப்படியிருப்பதற்குக் காரணம்)) வந்து அலைக்கும்,Vandhu Alaikkum - கரையிலேவந்து வீசப்பெற்ற மா மயிலை,Maa Mayilai - மயிலாபுரிக்கு அடுத்த மா வல்லிக் கேணியான்,Maa Vallik Keniyaan - திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிறஸர்வேச்வரன் ஐ தலை வாய் நாகத்து அணை,Ai Thalai Vaai Naagaththu Anai - ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும்டையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே வாளா,Vaalai - வெறுமனே கிடந்தருளும்,Kidandharulum - சயனித்திரா நின்றான் வாய் திறவான்,Vaai Thiravaan - வாய்திறந்து ஒன்று மருளிச்செய்வதில்லை தாளால்,Thaalal - திருவடியாலே உலகம் அளந்த அசவேகொல்,Ulagam Alandha Asavekol - உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ? |