Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2416 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2416நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு இது ஸ்ரீ திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் – லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ -என்கிறார்- 35
தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், – நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை.
நீன் ஓதம்,Neen Otham - பெரிய அலைகள் (- (இப்படியிருப்பதற்குக் காரணம்))
வந்து அலைக்கும்,Vandhu Alaikkum - கரையிலேவந்து வீசப்பெற்ற
மா மயிலை,Maa Mayilai - மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்,Maa Vallik Keniyaan - திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிறஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை,Ai Thalai Vaai Naagaththu Anai - ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும்டையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா,Vaalai - வெறுமனே
கிடந்தருளும்,Kidandharulum - சயனித்திரா நின்றான்
வாய் திறவான்,Vaai Thiravaan - வாய்திறந்து ஒன்று மருளிச்செய்வதில்லை
தாளால்,Thaalal - திருவடியாலே
உலகம் அளந்த அசவேகொல்,Ulagam Alandha Asavekol - உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?