| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2417 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே – அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம் என்று பார்த்து ஸ்ரீ திருக் குடந்தை தொடக்கமான- ஸ்ரீ திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் – பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் – 36 | நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத் தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால், அணைப்பார் கருத் தனா வான். | நாகத்து அணை,Naagaththu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே (- (எதுக்காக வென்னில்)) குடந்தை,Kudandhai - திருக்குடந்தையிலும் வெஃகா,Veghaa - திருவெஃகாவிலும் திரு எவ்வுள்,Thiru Evvul - திருவெவ்வுளுரிலும் (அப்படியே) நாகத்து அணை,Naagaththu Anai - சேஷசயனத்தின் மீது பால் கடல்,Paal Kadal - திருப்பாற்கடலிலும் ஆதி நெடுமால்,Aadhi Nedumaal - ஜகத்காரணபூனான ஸர்வேச்வரன் நாகத்து அணை,Naagaththu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேல் அரங்கம்,Arangam - திருவரங்கத்திலும் பேர்,Per - திருப்பேர் நகரிலும் அன்பில்,Anbil - அன்பில் என்னுந் திருப்பதியிலும் கிடக்கும்,Kitakkum - பள்ளி கொண்டிருக்கின்றான் அணைப்பார் கருத்தன் ஆவான்,Anaippar Karuttan Avan - அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக. |