Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2417 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2417நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே – அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம் என்று பார்த்து ஸ்ரீ திருக் குடந்தை தொடக்கமான- ஸ்ரீ திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் – பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் – 36
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், – நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத் தனா வான்.
நாகத்து அணை,Naagaththu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே (- (எதுக்காக வென்னில்))
குடந்தை,Kudandhai - திருக்குடந்தையிலும்
வெஃகா,Veghaa - திருவெஃகாவிலும்
திரு எவ்வுள்,Thiru Evvul - திருவெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை,Naagaththu Anai - சேஷசயனத்தின் மீது
பால் கடல்,Paal Kadal - திருப்பாற்கடலிலும்
ஆதி நெடுமால்,Aadhi Nedumaal - ஜகத்காரணபூனான ஸர்வேச்வரன்
நாகத்து அணை,Naagaththu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேல்
அரங்கம்,Arangam - திருவரங்கத்திலும்
பேர்,Per - திருப்பேர் நகரிலும்
அன்பில்,Anbil - அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்,Kitakkum - பள்ளி கொண்டிருக்கின்றான்
அணைப்பார் கருத்தன் ஆவான்,Anaippar Karuttan Avan - அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.