| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2418 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே -என்கிறார் – ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்- ஆதி நெடுமாலை விவரிக்கிறது – 37 | வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு, தானுலவு வெங்கதிரும் தண்மதியும், – மேனிலவு கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும், அண்டந் திருமால் அகைப்பு. | வான்,Van - ஆகாசமும் தீ,Ti - அக்நியும் உலவு வளி,Ulavvu Vali - உலாவுகின்ற வாயுவும் மா கடல்,Ma Katal - பெரிய கடலும் மா பொருப்பு,Ma Poruppu - பெரிய குலபர்வதங்களும் உலவு,Ulavvu - திரிகின்ற வெம் கதிர்தானும்,Vem Katirthanum - உஷ்ணகிரணனான ஸூர்யனும் தண்மதியும்,Tanmathiyum - குளிர்ந்த சந்திரனும் மேல் நிலவு,Mel Nilavu - மேலே நிலாவுகின்ற கொண்டல்,Kontal - மேகங்களும் பெயரும்,Peyarum - சேதநவர்க்கமும் திசை எட்டும்,Tisai Ettum - எட்டுத் திசைகளும் சூழ்ச்சியும்,Sulcciyum - ஆவரணங்களும் அண்டம்,Antam - ஆகிய இவையெல்லாவற்றோடுங் கூடின அண்டமும் திருமால்,Tirumal - ஸர்வேச்வரனுடைய அகைப்பு,Akaippu - ஸங்கல்பத்தினாலாயது. |