Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2419 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2419நான்முகன் திருவந்தாதி || மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் – அதுவும் பண்ணினான் அவன் தானே -ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில் அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் – ஈஸ்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே பண்ணும் அபிமானமும் அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும் அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் – 38
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன்,உகைக்கு மேல்,
எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும்,
அப்போது ஒழியும் – அழைப்பு.
அகைப்பு இல் மணிசரை,Akaiyppu Il Manisarai - உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்,Aaru Samayam - (நீ சங்களான) ஆறு மதங்களில்
புகைத்தான்,Pugaitthan - புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்,Poru Kadal Neer Vannan - அலையெறிகின்ற கடல் நீர்போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேச்வரன்
உகைக்கும் ஏல்,Ugaiykkum Ael - உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது,Appodhu - அப்போதே
எத் தேவர் வாலாட்டும்,Eth Thevar Vaalattum - எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்,Evvaru Seigaiyum - எவ்விதமான (பஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு,Azhaiyppu - (தேவதைகளின்) ஆஹ்வாகமும்
ஒழியும்,Ozhiyum - ஒழிந்து போய்விடும்