Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2420 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2420நான்முகன் திருவந்தாதி || லோக வ்ருத்தாந்தம் ஆன படியாகிறது என்று கை வாங்கி-தமக்கு ஸ்ரீ திருமலையையும் அங்கு நின்று அருளுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்- மலையிலே பெரிய அருவிகள் ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய ரத்ன தீப்தியை ஆனை அக்நி என்றும் சர்ப்பம் மின் என்றும் பயப்பட்டு ஒதுங்கும் திருமலை– அன்றிக்கே நெருப்புக்கு பயப்பட்டு யானை-மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் – இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல் என்று அந்வயம் 39
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, – மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு.
திருவேங்கடத்தானை,Thiruveengadathaanai - திருவேங்கடமுடையானை
காண,Kaan - கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்,Azhaiyppan - வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன்
வரன்றி வந்து இழிய,Varanri Vandu Izhaiya - திரட்டிக்கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்நிஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை,Yaanai - யானைகளானவை
வெருவி,Veruvi - பயப்பட்டு நிற்கவும்
அரவு,Aravu - மலைப் பாம்புகளானவை
மழை,Mazhai - மழைபோல் சொரிகின்ற
பேர் அருவி,Per Aruvi - பெரிய அருவிகளானவை
மணி,Mani - அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்,Odundum - (அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு,Verppu - திருமலையை
கூட,Kooda - சென்று கூடவேணுமென்று
திருக்கூடல் இழைப்பன்,Thirukoodal Izhaippan - கூடலிழைக்கின்றேன்