Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2421 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2421நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் – நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் – ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன் 40
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண்.
வெற்பு என்று,Verpu Endru - பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே (- (காண் – முன்னிலையசை))
வேங்கடம் பாடினேன்,Vengadam Paadinen - திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
விடு ஆக்கி நிற்கின்றேன்,Vidu Aakki Nirkindren - ‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்,Ninru Ninaikkindren - ‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற,Karkindra - ஓதப்படுகிற
நூல்,Nool - வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த,Valaiyil Pattirundha - வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்,Noolaatti Kelvanar - லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்,Kaal Valaiyil Pattirundhen - திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்துநிற்கின்றேன்.