| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2421 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் – நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் – ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன் 40 | வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார், கால்வலையில் பட்டிருந்தேன் காண். | வெற்பு என்று,Verpu Endru - பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே (- (காண் – முன்னிலையசை)) வேங்கடம் பாடினேன்,Vengadam Paadinen - திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே) விடு ஆக்கி நிற்கின்றேன்,Vidu Aakki Nirkindren - ‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன் நின்று நினைக்கின்றேன்,Ninru Ninaikkindren - ‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன், கற்கின்ற,Karkindra - ஓதப்படுகிற நூல்,Nool - வேதங்களாகிற சாஸ்த்ரங்களில் வலையில் பட்டிருந்த,Valaiyil Pattirundha - வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற நூலாட்டி கேள்வனார்,Noolaatti Kelvanar - லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய கால் வலையில் பட்டிருந்தேன்,Kaal Valaiyil Pattirundhen - திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்துநிற்கின்றேன். |