திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2421 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2421நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் – நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் – ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன் திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன் 40
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், – கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார், கால்வலையில் பட்டிருந்தேன் காண்.
பதவுரை Show / Hide
வெற்பு என்று,Verpu Endru - பலமலைகளையும் சொல்லிவருகிற அடைவிலே (- (காண் – முன்னிலையசை))
வேங்கடம் பாடினேன்,Vengadam Paadinen - திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
விடு ஆக்கி நிற்கின்றேன்,Vidu Aakki Nirkindren - ‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்,Ninru Ninaikkindren - ‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘ என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற,Karkindra - ஓதப்படுகிற
நூல்,Nool - வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த,Valaiyil Pattirundha - வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்,Noolaatti Kelvanar - லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்,Kaal Valaiyil Pattirundhen - திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்துநிற்கின்றேன்.