| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2422 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்- நான் ஸ்ரீ திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்- 41 | காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர, ஓண விழவில் ஒலியதிர – பேணி வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய், திருவேங் கடமதனைச் சென்று. | கல் அருவி,Kal Aruvi - ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக முத்து உதிர,Muthu Udhira - முத்துக்கள் உதிரப்பெற்றதாய், ஒணம் விழவில்,Onam Vizhavil - திருவோணத்திருநாளில் ஒலி அதிர,Oli Athira - (திருப்பல்லாண்டு பாடுகை வேத்பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய் பேணி வரு,Peni Varu - (பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான வேங்கடவா,Vengadava - திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே! என் உள்ளம் புகுந்தாய்,En Ullam Pugundhai - நீ என் நெஞ்சிலே புகுந்துவிட்டாய் (நீ திருமலையைவிட்டு என்னுள்ளத்திலே வந்துவிட்டாலும்) திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்,Thiruvengadam Adhanai Sendru Kaanal Urugindren - நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன். |