Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2422 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2422நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்- நான் ஸ்ரீ திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்- 41
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர – பேணி
வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று.
கல் அருவி,Kal Aruvi - ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக
முத்து உதிர,Muthu Udhira - முத்துக்கள் உதிரப்பெற்றதாய்,
ஒணம் விழவில்,Onam Vizhavil - திருவோணத்திருநாளில்
ஒலி அதிர,Oli Athira - (திருப்பல்லாண்டு பாடுகை வேத்பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு,Peni Varu - (பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா,Vengadava - திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்,En Ullam Pugundhai - நீ என் நெஞ்சிலே புகுந்துவிட்டாய் (நீ திருமலையைவிட்டு என்னுள்ளத்திலே வந்துவிட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்,Thiruvengadam Adhanai Sendru Kaanal Urugindren - நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.