| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2423 | நான்முகன் திருவந்தாதி || நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக ஸ்ரீ திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் -நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் – ஸ்ரீ திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் – 42 | சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை, நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும் கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும், அடிக்கமலம் இட்டேத்து மங்கு. | சேண் உயர் வேங்கடத்தை,Seen Uyar Vengadathai - மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை சென்று வணங்குமின்,Sendru Vanangumin - சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது) நீர்மையால்,Neermiyal - தன் ஸ்வபாவத்தினால் நின்று வினைகெடுக்கும்,Ninru Vinaiyketukkum - பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும் அங்கு,Angu - அத்திருமலையில், கடி கமலம் நான்முகனும்,Kadi Kamalam Nanmuganum - பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும் கண் மூன்றத்தானும்,Kan Moondrathaanum - முக்கண்ணனான சிவபிரானும் என்றும்,Endrum - எக்காலத்தும் அடி,Adi - (எம்பெருமானது) திருவடிகளிலே கமலம்,Kamalam - தாமரைப் புஷ்பங்களை இட்டு,Ittu - ஸமர்ப்பித்து எத்தும்,Ettum - துதித்துக்கொண்டிருப்பார்கள். |