Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2423 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2423நான்முகன் திருவந்தாதி || நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக ஸ்ரீ திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் -நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் – ஸ்ரீ திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் – 42
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு.
சேண் உயர் வேங்கடத்தை,Seen Uyar Vengadathai - மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்,Sendru Vanangumin - சென்று வணங்குங்கோள் (அத்திருமலையானது)
நீர்மையால்,Neermiyal - தன் ஸ்வபாவத்தினால்
நின்று வினைகெடுக்கும்,Ninru Vinaiyketukkum - பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு,Angu - அத்திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்,Kadi Kamalam Nanmuganum - பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்,Kan Moondrathaanum - முக்கண்ணனான சிவபிரானும்
என்றும்,Endrum - எக்காலத்தும்
அடி,Adi - (எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்,Kamalam - தாமரைப் புஷ்பங்களை
இட்டு,Ittu - ஸமர்ப்பித்து
எத்தும்,Ettum - துதித்துக்கொண்டிருப்பார்கள்.