Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2424 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2424நான்முகன் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் – 43
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், – திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு.
மங்குல் தோய் சென்னி,Mangul Thoy Senni - மேகமண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை,Vadaveeng Kadaththaanai - வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்,Kaappu Anivaan - திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்,Thingal Sadai Aera Vaiththaanum - சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்
தாமரை மேலானும்,Thamarai Melaanum - தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்,Thaam - ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு,Kudai Aera Kuviththuk Kondo - திருமுத்துக்குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
கங்குல்,Gangul - ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்,Pugundhaargal - திருமலைக்குச் செல்லுவர்கள்