| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2425 | நான்முகன் திருவந்தாதி || ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் – குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே -கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்- அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே- படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 44 | கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய், தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி, போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே, போம்குமர ருள்ளீர் புரிந்து. | குமரர் உள்ளீர்,Kumarar Ullae - கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே! பண்டு,Pandhu - முன்பொருகால் குடங்கால் மேல்,Kudankaal Mel - மடியிலே கொண்டு வைத்த குழவி ஆய்,Kondum Vaiththa Kuzhavi Aay - எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு போம்,Poom - அந்தர்த்தான மடைந்தவனான குமரன்,Kumaran - நித்யயுவாவான எம்பெருமான் நிற்கும்,Nirkkum - நிற்றுமிடமான தண்டம் அரக்கண்,Thandam Arakkan - தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய தலை,Thalai - பத்துத் தலைகளையும் தாளால்,Thaalal - திருவடியாலே எண்ணி,Enni - கீறி எண்ணிக் காட்டிவிட்டு பொழில் வேங்கடம் மலைக்கே,Pozhil Vengadam Malaikke - சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே புரிந்துபோம்,Purindupoom - ஆசைகொண்டு செல்லுங்கோள் |