Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2425 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2425நான்முகன் திருவந்தாதி || ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் – குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே -கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்- அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே- படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 44
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து.
குமரர் உள்ளீர்,Kumarar Ullae - கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு,Pandhu - முன்பொருகால்
குடங்கால் மேல்,Kudankaal Mel - மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்,Kondum Vaiththa Kuzhavi Aay - எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்,Poom - அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்,Kumaran - நித்யயுவாவான எம்பெருமான்
நிற்கும்,Nirkkum - நிற்றுமிடமான
தண்டம் அரக்கண்,Thandam Arakkan - தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை,Thalai - பத்துத் தலைகளையும்
தாளால்,Thaalal - திருவடியாலே
எண்ணி,Enni - கீறி எண்ணிக் காட்டிவிட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே,Pozhil Vengadam Malaikke - சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்,Purindupoom - ஆசைகொண்டு செல்லுங்கோள்