Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2426 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2426நான்முகன் திருவந்தாதி || அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் ஸ்ரீ திருமலை -என்கிறார் – வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் – 45
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப – தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.
புண்டரீகம் பாதம்,Pundareegam Paatham - திருவடித் தாமரைகளில்
புரிந்து,Purinthu - அன்புபூண்டு
மலர் இட்டு,Malar Ittu - புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து,Parinthu - மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப,Padukaadu Nirpa - வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக
எங்கும்,Engum - ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து,Therinthu - விளங்கி
தான் ஓங்கி நின்கின்றான்,Thaan Ongi Ninkindraan - குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும்பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே,Than Aruvi Vengadame - குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்,Vaanorkkum - நித்யஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்,Mannorkkum - நிலத்தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு,Vaippu - நிதியாயிருக்கும்.