Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2427 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2427நான்முகன் திருவந்தாதி || திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற ஸ்ரீ திருமலையை எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்- அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று- 46
வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, – எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று.
மா மதியை,Maa Mathiyai - ‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ,Mani Vilakku Aa - மங்கள தீபமாக
வைப்பன் என்று,Vaippan Endru - (திருமுன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்,Kai Neettum - உயரத்தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற
யானையை,Yaanaiyai - ஒருயானையை (பிடிப்பதற்காக)
எப்பாடும்,Eppaadum - நாற்புறமும்
வேடு வளைக்க,Veedu Valaikka - வேடர் சூழ்ந்து கொள்ள
குறவர்,Kuravar - (அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்,Vil Edukkum - (அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக்கொண்டு போகுமிடமான
வேங்கடமே,Vengadame - திருமலையையே
நாடு,Naadu - நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து,Valaiththu - விரதக்ஷிணம் பண்ணி
ஆடுதும் ஏல்,Aaduthum Ael - (மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம்பண்ணப் பெற்றால்
நன்று,Nandru - நல்லது