திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2428 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2428நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி ஸ்ரீ திருமலையை அனுபவிக்கிறார் – ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே ஸ்ரீ திருமலையை ஊர் என்கிறது – 47
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் , பொன்மணியும் முத்தமும் பூமரமும், – பன்மணிநீ ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் வேடு முடைவேங் கடம்.
பதவுரை Show / Hide
ஆளியும்,Aaliyum - யாளிகளும்
கோள் அரியும்,Kool Ariyum - வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்,Pon - பொன்களும்
மணியும்,Maniyum - மாணிக்கங்களும்
முத்தமும்,Muthamum - முத்துக்களும்
பூ மரமும்,Poo Maramum - பூத்தமரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்,Pala Mani Neerodu Poruthu Urulum Kaanamum - பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்,Vaanaramum - குரங்குகளும்
வேடும்,Vedum - வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை,Uday - உடையதான
வேங்கடம்,Vengadam - திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்,Nal Mani Vannan Oor - நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்