Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2428 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2428நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி ஸ்ரீ திருமலையை அனுபவிக்கிறார் – ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே ஸ்ரீ திருமலையை ஊர் என்கிறது – 47
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் ,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், – பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்.
ஆளியும்,Aaliyum - யாளிகளும்
கோள் அரியும்,Kool Ariyum - வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்,Pon - பொன்களும்
மணியும்,Maniyum - மாணிக்கங்களும்
முத்தமும்,Muthamum - முத்துக்களும்
பூ மரமும்,Poo Maramum - பூத்தமரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்,Pala Mani Neerodu Poruthu Urulum Kaanamum - பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்,Vaanaramum - குரங்குகளும்
வேடும்,Vedum - வேடச்சாதியுமாகிற இவற்றை
உடை,Uday - உடையதான
வேங்கடம்,Vengadam - திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்,Nal Mani Vannan Oor - நல்ல நீலரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ்தானமாம்