Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2429 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2429நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்- ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து பரம ப்ராப்யமான ஸ்ரீ திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்- 48
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், – வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை.
விண்ணோர்,Vinnor - நித்யஸூரிகளால்
மெய்ம்மையால்,Meimmaiyaal - உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்,Thozhuvadhuvum - ஆச்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே,Vengadame - திருமலையே
வினை,Vinai - பாவங்களையும்
மெய் நோய்,Mei Noi - உடம்பைப் பற்றின நோய்களையும்
தீர்ப்பதுவும்,Theerppadhuvum - போக்கடிக்கவல்லதும்
வேங்கடமே,Vengadame - திருமலையே
தானவர் வீழ,Thaanavar Veezha - அசுரர்கள் மாளும்படி
தன் ஆழிபடை தொட்டு,Than Aazhipadai Thottu - தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை,Vaanavarai - தேவர்களை
காப்பான்,Kaappaan - காத்தருளுமெம் பெருமானுடைய
மலை,Malai - திருமலை
வேங்கடமே,Vengadame - திருவேங்கடமேயாயம்