| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2430 | நான்முகன் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் -என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது- 49 | மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி, தலையாமை தானொருகை பற்றி, – அலையாமல் பீறக் கடைந்த பெருமான் திருநாமம், கூறுவதே யாவர்க்கும் கூற்று. | மலை,Malai - மந்தரபர்வதத்தை ஆமை மேல் வைத்து,Aamai Mel Vaiththu - கூர்மரூபியான தன் மேல்வைத்து வாசுகியை,Vasugiyai - வாஸுகிநாகத்தை சுற்றி,Suttri - (கடை கயிறாகச்) சுற்றி அலையாமல்,Alaiyamal - நீர் வெளியில் புரளாமல் பீற,Peera - (அமுதம்) புறப்படும்படியாக கடைந்த,Kadaindha - (கடலைக்) கடைந்தருளின பெருமான்,Perumaan - எம்பெருமானுடைய ஆமை,Aamai - கூர்மரூபியாகத் திருவ்வதரித்த தானே ஒரு கை பற்றி,Oru Kai Patri - (மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி திருநாமம்,Thirunamam - திருநாமங்களை கூறுவதே,Kooruvaadhe - வாய்விட்டுச் சொல்லுவதே யாவர்க்கும்,Yaavarkkum - அனைவர்க்கும் கூற்று,Kootru - வாய்ப்பேச்சாகக் கடவது |