Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2430 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2430நான்முகன் திருவந்தாதி || பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் -என்கிறார் – ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது- 49
மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி, – அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று.
மலை,Malai - மந்தரபர்வதத்தை
ஆமை மேல் வைத்து,Aamai Mel Vaiththu - கூர்மரூபியான தன் மேல்வைத்து
வாசுகியை,Vasugiyai - வாஸுகிநாகத்தை
சுற்றி,Suttri - (கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்,Alaiyamal - நீர் வெளியில் புரளாமல்
பீற,Peera - (அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த,Kadaindha - (கடலைக்) கடைந்தருளின
பெருமான்,Perumaan - எம்பெருமானுடைய
ஆமை,Aamai - கூர்மரூபியாகத் திருவ்வதரித்த தானே
ஒரு கை பற்றி,Oru Kai Patri - (மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்,Thirunamam - திருநாமங்களை
கூறுவதே,Kooruvaadhe - வாய்விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்,Yaavarkkum - அனைவர்க்கும்
கூற்று,Kootru - வாய்ப்பேச்சாகக் கடவது