| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2431 | நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் – எப்போதும் ஸ்ரீ எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்- அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு அதாவது -தத் விஷய ஜ்ஞானம் அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே- 50 | கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ மாற்றமும் சாரா வகையறிந்தேன், – ஆற்றங் கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன் உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. | கடல்,Kadal - திருப்பாற் கடலிலே கிடக்கும்,Kitakkum - (பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண்வளர்ந்தருள்கிற மாயன்,Maayan - ஆச்சரியபூதனாய் ஆறு கரை,Aaru Karai - திருக்காவேரிக்கரையான கபிஸ்தலத்திலே கிடக்கும்,Kitakkum - திருக்கண் வளர்ந்தருள்கிற கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய உரை,Urai - ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம் எனக்கு,Enakku - என்னுடைய உள்ளத்து,Ullathu - நெஞ்சிலே கிடக்கும்,Kitakkum - பதிந்திருக்கின்றது (ஆனபின்பு) கூற்றமும் சாரா,Kootramum Saaraa - மிருத்யுபயம் அணுகாமலும் கொடு வினையும்சாரா,Kodu Vinaiyum Saaraa - கொடிய பாவங்கள் அணுகாமலும் தீ மாற்றமும் சாரா வகை,Thee Maatramum Saaraa Vagai - கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை அறிந்தேன்,Arindhen - அறிந்தவனானேன். |