| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2432 | நான்முகன் திருவந்தாதி || அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் ஸ்ரீ பரம பதத்திலும் இல்லை -என்கிறார் – ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார் ஆகவுமாம்- ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று – 51 | எனக்காவா ராரொரு வரேஎம் பெருமான் தனக்காவான் தானேமற் றல்லால – புனக்காயா வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு விண்ணெல்லா முண்டோ விலை. | புனம்,Punam - தன்னிலத்திலே வளர்கிற காயா,Kaayaa - காயாம்பூவினுடைய வண்ணனே,Vannane - நிறம்போன்ற நிறமுடைய பெருமானே! எனக்கு,Enakku - (உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப்பாத்ர பூதனான) எனக்கு ஆவார் ஆர் ஒருவரே,Aavaar Aar Oruvarae - ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை) எம்பெருமான்,Emperumaan - ஸர்வேச்வரனாகிய நீயும் தானே தனக்கு ஆவான் அல்லால்,Thaanae Thanakku Aavaan Allaal - தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனேயன்றி மற்று,Mattru - எனக்கு ஒப்பாக வல்லையோ? உன்னை பிறர் அறியார்,Unnai Pirar Ariyaar - நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள், என் மதிக்கு,En Mathikku - (உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு விண் எல்லாம்விலை உண்டோ,Vin Ellamvilai Undo - மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ? |