Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2433 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2433நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்- இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்- 52
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் – முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர்.
தக்கோர்,Thakkor - அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்
விலைக்கு ஆள்படுவர்,Vilakku Aalpaduvar - ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப்பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்,Vichaadhi Aetru Unbar - (மிகுத்யுதானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள்பலி திரிவர்,Thalaikku Aalpali Thirivar - ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நரபலியாகத் திரிவர்கள்
முலைக்கால்விடம் உண்டவேந்தனையே,Mulaikkaalvidam Unda Vendaanaiye - (பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்,Veerumaa Ettaadhaar - விலக்ஷணமாகத் துதிக்கமாட்டாதவர்களாய்
கல்லாதவர்,Kallaadhavar - அறிவுகெட்டவர்களாய்க்கொண்டு
கடம் உண்டார்,Kadham Undaar - பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.