| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2434 | நான்முகன் திருவந்தாதி || ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்- நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் – இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை- 53 | கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன் அல்லா லொருதெய்வம் யானிலேன், – பொல்லாத தேவரை தேவரல் லாரை, திருவில்லாத் தேவரைத் தேறல்மின் தேவு. | கல்லாதவர் இலங்கை,Kallaadhavar Ilangai - அறிவுகெட்ட ராக்ஷஸருடையதான இலங்காபுரியை கட்டு அழித்த,Kattu Azhitha - அரணழித்த காகுத்தன் அல்லால்,Kaakuththan Allaal - இராமபிரானையல்லது ஒரு தெய்வம்,Oru Deivam - வேறொரு தெய்வத்தை யான் இலேன்,Yaan Ileen - நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன் பொல்லாத தேவரை,Polladha Devarai - கண்கொண்டு காணக்கூடாத தேவதைகளையும் தேவர் அல்லாரை,Devar Allaarai - (உண்மையில்) தெய்வத் தன்மையற்றவர்களாயும் திரு இல்லா தேவரை,Thiru Illaa Devarai - பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும்ள்ள சிலரை தேவு,Devu - தெய்வங்களாக தேறேல்மின்,Theerelmin - நீங்கள் நினைக்க வேண்டா. |