Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2434 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2434நான்முகன் திருவந்தாதி || ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்- நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் – இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை- 53
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், – பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறல்மின் தேவு.
கல்லாதவர் இலங்கை,Kallaadhavar Ilangai - அறிவுகெட்ட ராக்ஷஸருடையதான இலங்காபுரியை
கட்டு அழித்த,Kattu Azhitha - அரணழித்த
காகுத்தன் அல்லால்,Kaakuththan Allaal - இராமபிரானையல்லது
ஒரு தெய்வம்,Oru Deivam - வேறொரு தெய்வத்தை
யான் இலேன்,Yaan Ileen - நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை,Polladha Devarai - கண்கொண்டு காணக்கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை,Devar Allaarai - (உண்மையில்) தெய்வத் தன்மையற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை,Thiru Illaa Devarai - பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும்ள்ள சிலரை
தேவு,Devu - தெய்வங்களாக
தேறேல்மின்,Theerelmin - நீங்கள் நினைக்க வேண்டா.