திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2434 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2434நான்முகன் திருவந்தாதி || ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்- நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் – இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை- 53
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன் அல்லா லொருதெய்வம் யானிலேன், – பொல்லாத தேவரை தேவரல் லாரை, திருவில்லாத் தேவரைத் தேறல்மின் தேவு.
பதவுரை Show / Hide
கல்லாதவர் இலங்கை,Kallaadhavar Ilangai - அறிவுகெட்ட ராக்ஷஸருடையதான இலங்காபுரியை
கட்டு அழித்த,Kattu Azhitha - அரணழித்த
காகுத்தன் அல்லால்,Kaakuththan Allaal - இராமபிரானையல்லது
ஒரு தெய்வம்,Oru Deivam - வேறொரு தெய்வத்தை
யான் இலேன்,Yaan Ileen - நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை,Polladha Devarai - கண்கொண்டு காணக்கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை,Devar Allaarai - (உண்மையில்) தெய்வத் தன்மையற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை,Thiru Illaa Devarai - பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும்ள்ள சிலரை
தேவு,Devu - தெய்வங்களாக
தேறேல்மின்,Theerelmin - நீங்கள் நினைக்க வேண்டா.