Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2435 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2435நான்முகன் திருவந்தாதி || சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்- சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு – 54
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், – யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை.
தேவர் ஆய் நிற்கும் அத்தேவம்,Devar Aay Nirkum Atthavam - (அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்,Muthu Punarpum - அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்,Yaavar Aay Nirkindrathu Ellam - மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்)
அத் தேவரில்,Ath Devaril - அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்,Moovar Aay Nirkum - த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்,Nedumaal Endru Ooraathaar - ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந்துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை,Karkindrathu Ellam Kada - பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.