| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2435 | நான்முகன் திருவந்தாதி || சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்- சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு – 54 | தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், – யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார், கற்கின்ற தெல்லாம் கடை. | தேவர் ஆய் நிற்கும் அத்தேவம்,Devar Aay Nirkum Atthavam - (அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும், முது புணர்ப்பும்,Muthu Punarpum - அநாதியான நிலைமையும் யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்,Yaavar Aay Nirkindrathu Ellam - மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்) அத் தேவரில்,Ath Devaril - அந்த தேவர்களுக்குள்ளே மூவர் ஆய் நிற்கும்,Moovar Aay Nirkum - த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற நெடுமால் என்று ஓராதார்,Nedumaal Endru Ooraathaar - ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந்துணர மாட்டாதவர்கள் கற்கின்றது எல்லாம் கடை,Karkindrathu Ellam Kada - பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது. |