Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2437 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2437நான்முகன் திருவந்தாதி || இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் – அம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும் தன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி- அவன் தானே சாஷியாகத் தோற்றான் – 56
அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், – உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு.
அவர் இவர் என்று இல்லை,Avar Ivar Endru Illai - பெரியார் சிறியார் என்று ஒருவாசியில்லை
அனங்கவேள் தாதைக்கு,Anangavel Thathaikku - காமனுக்குத் தந்தையான் கண்ணபிரானுக்கு
எவரும்,Evarum - ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்,Edhir Illai Kandeer - எதிர் நிற்கவல்லாரில்லை காண்மின்
உவரிக்கடல் நஞ்சம் உண்டான்,Uvarikadal Nanjam Undaan - கடலில் தோன்றின விஷத்தை உட்கொண்டவனான சிவன்
வாணற்கு,Vaanarkku - பாணாஸுரனுக்கு
கடன் என்று,Kadan Endru - ‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று,Udan Nindru - அவனோடு கூடவேயிருந்து
ஒருங்கு தோற்றான்,Orungu Thotran - குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான்.