| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2438 | நான்முகன் திருவந்தாதி || அவனுடைய ஸ்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று – அவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன- அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ஸ்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்- ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே – 57 | ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான், பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், – மருங்கிருந்த வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம் ஆனவர்தா மல்லாக தென். | பேசில்,Pesil - உண்மைபேசப் புகுந்தால் பெரு குருந்தம் சாய்த்தவனே,Peru Kuruntham Saaythavane - பெரிய குருந்தமரத்தை வேர் பறியத்தள்ளி முறித்த கண்ணபிரானே ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்,Orungu Irundha Nal Niyaiyum Thee Vinaiyum Aavaan - உடன்நிற்கும் புண்யபாபங்களுக்கு நிர்வாஹகன், மருங்கு இருந்த,Marungu Irundha - ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான) வானவர்தாம்,Vaanavardham - தேவர்களும் தானவர்தாம்,Thaanavardham - அசுரர்களும் தாரகைதான்,Thaaragaithaan - இப்பூமியும் (ஆகிய இவையெல்லாம்) என் நெஞ்சம் ஆனவர்தாம்,En Nenjam Aanavardham - என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம் அல்லாத்து என்,Allaatthu En - அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது. |