Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2438 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2438நான்முகன் திருவந்தாதி || அவனுடைய ஸ்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று – அவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன- அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ஸ்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்- ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே – 57
ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், – மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்.
பேசில்,Pesil - உண்மைபேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே,Peru Kuruntham Saaythavane - பெரிய குருந்தமரத்தை வேர் பறியத்தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்,Orungu Irundha Nal Niyaiyum Thee Vinaiyum Aavaan - உடன்நிற்கும் புண்யபாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த,Marungu Irundha - ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர்தாம்,Vaanavardham - தேவர்களும்
தானவர்தாம்,Thaanavardham - அசுரர்களும்
தாரகைதான்,Thaaragaithaan - இப்பூமியும் (ஆகிய இவையெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர்தாம்,En Nenjam Aanavardham - என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்
அல்லாத்து என்,Allaatthu En - அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது.