| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2439 | நான்முகன் திருவந்தாதி || அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே- தமக்குப் பிறந்த ஸ்நேஹத்தை அருளிச் செய்கிறார்- என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்- ஷத்ரிய ஜாதி எல்லாம் அஞ்சும்படிக்கு ஈடாக பண்டு பூமியை அடைய தன் கால் கீழே இட்டுக் கொள்ளுவதும்-செய்து -பின்னையும் என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறவனை தன் நெஞ்சிலே கொள்ளாத ருஷப வாகனனுடைய-மகா பாபத்தைப் போக்கி அத்தாலே தான் உளனான வனுக்கு-ஸ்நேஹத்தை உண்டாக்கினேன்- 58 | என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான், மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், – என்னெஞ்ச மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த் தாயனுக் காக்கினேன் அன்பு. | என் நெஞசம் மேயான்,En Nenjam Meyaan - என்னுடைய நெஞ்சிலே நித்யவாஸம் செய்பவனும் இருள் நீக்கி எம்பிரான்,Irul Neekki Empran - (நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும் முன் ஒருநாள்,Mun Orunaal - முன்பொருகாலத்தில் மன் அஞ்ச,Man Anja - மஹாபலிச்க்ரவர்த்தி பயப்படும் படியாக மண் அளந்தான்,Man Alandhaan - பூமியை அளந்து கொண்டவனும் என் நெஞ்சம் மேயானை,En Nenjam Meyaanai - (அந்த திருக்கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை இல்லா,Illaa - நெஞ்சில் உடையனாகாத விடை ஏற்றான்,Vidai Aetraan - ரிஷபவாஹநனான ருத்ரனுடைய வெம்வினை,Vemvinai - மஹாபாதகத்தை தீர்த்து,Theerthu - தொலைத்து ஆயானுக்கு,Aayaanukku - (அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு அன்பு ஆக்கினேன்,Anbu Aakkinen - என் அன்பைச் செலுத்தினேன். |