| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2440 | நான்முகன் திருவந்தாதி || தம்மளவில் இல்லாதபடி ஸ்ரீ எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை -என்கிறார்- சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று- அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று – முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு- 59 | அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக் கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், – பொன்பாவை கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி ஆள்வாய்க் கடியேன்நான் ஆள். | அன்பு ஆவாய்,Anbu Aavaai - (என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே! ஆர் அமுதம் ஆவாய்,Aar Amudham Aavaai - பரமபோக்யனாயிருப்பவனே! அடியேனுக்கு இன்பு ஆவாய்,Adiyenukku Inbu Aavaai - (உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே! என் கேசவனே,En Kesavane - எம்பெருமானே! கேடு இன்றி,Kedu Inri - ஒருகுறையுமில்லாமல் ஆள்வாய்க்கு,Aalvaaykku - ரக்ஷிக்கவல்லவுனுக்கு எல்லாமும் நீ ஆவாய்,Ellamum Nee Aavaai - மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயேயா யிருப்பவனே! பொன் பாவை கேள்வா,Pon Paavai Kelvvaa - திருமகள் நாதனே! கிளர் ஒளி,Kilar Oli - (அத்திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய நான் அடியேன்,Naan Adiyen - நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன் ஆள்,Aal - (அடியேனைக் காத்தருள்) |