Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2440 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2440நான்முகன் திருவந்தாதி || தம்மளவில் இல்லாதபடி ஸ்ரீ எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை -என்கிறார்- சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று- அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று – முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு- 59
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், – பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.
அன்பு ஆவாய்,Anbu Aavaai - (என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
ஆர் அமுதம் ஆவாய்,Aar Amudham Aavaai - பரமபோக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்,Adiyenukku Inbu Aavaai - (உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
என் கேசவனே,En Kesavane - எம்பெருமானே!
கேடு இன்றி,Kedu Inri - ஒருகுறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு,Aalvaaykku - ரக்ஷிக்கவல்லவுனுக்கு
எல்லாமும் நீ ஆவாய்,Ellamum Nee Aavaai - மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயேயா யிருப்பவனே!
பொன் பாவை கேள்வா,Pon Paavai Kelvvaa - திருமகள் நாதனே!
கிளர் ஒளி,Kilar Oli - (அத்திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய
நான் அடியேன்,Naan Adiyen - நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்,Aal - (அடியேனைக் காத்தருள்)