Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2441 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2441நான்முகன் திருவந்தாதி || இவர் தன்னை விடில் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமான் அதி சங்கிக்க விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்- என்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது – விரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் – 60
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மைய – கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்.
கேட்பார்க்கு,Ketpaarkku - ஸ்வயத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே,Aru Porul Aay Nindri Aranganey - அறியவொண்ணாத பரம்பொருளான அரங்கநாதனே!
ஆள் பார்த்து உழிதருவாய்,Aal Paarthu Uzitharuvai - நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழிதருவேன்,Nin Thaal Paarthu Uzitharuven - உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை,Thanmaiyai - இந்த ஸ்வபாவத்தை
என்றும்,Endrum - என்றைக்கும் நிலைத்திருக்கும்படியாகக் கடாக்ஷித் தருளவேணும்
உன்னை விரும்புவதே,Unnai Virumbuvadhe - நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்,Manam - நெஞ்சில்
விள்ளேன்,Villain - தவிராதவனாயிருக்கின்றேன்.