| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2441 | நான்முகன் திருவந்தாதி || இவர் தன்னை விடில் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமான் அதி சங்கிக்க விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்- என்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது – விரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் – 60 | ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின் தாட்பார்த் துழிதருவேன் தன்மைய – கேட்பார்க் கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை விரும்புவதே விள்ளேன் மனம். | கேட்பார்க்கு,Ketpaarkku - ஸ்வயத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே,Aru Porul Aay Nindri Aranganey - அறியவொண்ணாத பரம்பொருளான அரங்கநாதனே! ஆள் பார்த்து உழிதருவாய்,Aal Paarthu Uzitharuvai - நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே! நின் தாள் பார்த்து உழிதருவேன்,Nin Thaal Paarthu Uzitharuven - உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய தன்மையை,Thanmaiyai - இந்த ஸ்வபாவத்தை என்றும்,Endrum - என்றைக்கும் நிலைத்திருக்கும்படியாகக் கடாக்ஷித் தருளவேணும் உன்னை விரும்புவதே,Unnai Virumbuvadhe - நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை மனம்,Manam - நெஞ்சில் விள்ளேன்,Villain - தவிராதவனாயிருக்கின்றேன். |