Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2443 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2443நான்முகன் திருவந்தாதி || ஸ்ரீ பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈஸ்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்- மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச் சொல்லும்படி அன்றிக்கே ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீயபதி தானே- 62
திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து.
திரு இருந்த மார்வன்,Thiru Irundha Maarvan - பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்,Sireedharan Than - ‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை,Vandu Ulavu Than Thuzhai Thar Thannai - வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி,Soodi - தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து,Thariththu - அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்,Thiru Nindra Pakkam Thiravithu Endru Ooraar - ‘பிராட்டி பொருந்தியிருக்கப்பெற்ற வலப்பக்கத்தை யுடைய வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறியமாட்டாதவர்கள்.
கரு நின்ற,Karun Nindra - (தங்களைப்போலே) கர்ப்பவரஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை
கல்லாக்கு உரைப்பர்,Kallaakku Uraippar - (பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.