Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2444 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2444நான்முகன் திருவந்தாதி || நான் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் – தரித்து இருந்தேன் ஆகைக்காக-பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்- 63
தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது.
தாராகணம்,Thaarakanam - நக்ஷத்ரகணங்களினுடைய
போர்,Por - (சுபாசுப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த,Virithu Uraitha - (ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை,Vem Naagathu Unnai - (பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
தெரித்து,Therithu - அநுஸந்தித்தும்
எழுதி,Ezhuthi - எழுதியும்
வாசித்தும்,Vaasiththum - (எழுதினவற்றைப் படித்தும்)
கேட்டும்,Kaettum - (ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும்
வணங்கி,Vanangi - நமஸ்காரம்பண்ணியும்
வழிபட்டும்,Vazhipattum - உபசாரங்களைச் செய்தும்
பூசித்தும்,Poosiththum - பூஜித்தும்
போது போக்கினேன்,Podhu Pookkinen - காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே,Thariththirundhen Aagave - ஸத்தை பெறுவதற்காக.