Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2445 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2445நான்முகன் திருவந்தாதி || அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை- உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்- அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே-நமக்கு உத்பாதகனானவன் –ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே இவ்வாத்மாவுக்கு உறுவது – 64
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை,- நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை, சொல்லுவதே சூது.
பொன் மகரம் காதானை,Pon Makaram Kaadhanai - அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி,Aadhi - ஜகத்காரண பூதனும்
பெருமானை,Perumaiyai - பெருமை பொருந்தியவனும்
நாதனை,Nadhanai - (அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை,Nallaanai - (ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை,Naaranai - நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை,Nam Ezhpirappu Arukkum Sollaanai - நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்கவல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்,Podhu Aana Ittu Irainji Aeththumin - புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
சொல்லுவதே,Solluvadhai - (அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது,Soodhu - நல்ல வாய்ப்பு