| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2445 | நான்முகன் திருவந்தாதி || அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை- உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்- அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே-நமக்கு உத்பாதகனானவன் –ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே இவ்வாத்மாவுக்கு உறுவது – 64 | போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக் காதானை யாதிப் பெருமானை,- நாதானை நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும் சொல்லானை, சொல்லுவதே சூது. | பொன் மகரம் காதானை,Pon Makaram Kaadhanai - அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும் ஆதி,Aadhi - ஜகத்காரண பூதனும் பெருமானை,Perumaiyai - பெருமை பொருந்தியவனும் நாதனை,Nadhanai - (அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும் நல்லானை,Nallaanai - (ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும் நாரணனை,Naaranai - நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும் நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை,Nam Ezhpirappu Arukkum Sollaanai - நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்கவல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்,Podhu Aana Ittu Irainji Aeththumin - புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள் சொல்லுவதே,Solluvadhai - (அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே சூது,Soodhu - நல்ல வாய்ப்பு |