திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2445 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2445நான்முகன் திருவந்தாதி || அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை- உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்- அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே-நமக்கு உத்பாதகனானவன் –ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே இவ்வாத்மாவுக்கு உறுவது – 64
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக் காதானை யாதிப் பெருமானை,- நாதானை நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும் சொல்லானை, சொல்லுவதே சூது.
பதவுரை Show / Hide
பொன் மகரம் காதானை,Pon Makaram Kaadhanai - அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி,Aadhi - ஜகத்காரண பூதனும்
பெருமானை,Perumaiyai - பெருமை பொருந்தியவனும்
நாதனை,Nadhanai - (அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை,Nallaanai - (ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை,Naaranai - நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை,Nam Ezhpirappu Arukkum Sollaanai - நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்கவல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்,Podhu Aana Ittu Irainji Aeththumin - புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
சொல்லுவதே,Solluvadhai - (அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது,Soodhu - நல்ல வாய்ப்பு