Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2446 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2446நான்முகன் திருவந்தாதி || ஸ்மர்தவ்யனான ஸ்ரீ எம்பெருமானுடைய நீர்மையாலே ஸ்ரீ பரம பத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார் அன்றிக்கே ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்- ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம் 65
சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை – யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லீ ரிடம்.
மாது ஆய,Maathu Aaya - அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை,Maalavanai - (ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை,Maadhavanai - திருமாலைக் குறித்து
சொல் மாலை,Sol Maalai - இச்சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு,Yaadhanum Valla Aa Sindhiththu Iruppeerkku - ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்,Vaikundhaththu Idam Illaiyo Solliir - ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்,Solliir - சொல்லுங்கள்
சூது ஆவது,Soodhu Aavathu - இதுவே நமக்கு நல்லவாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்,En Nenjaththu Enninain - என்மனத்தில் உறுதி கொண்டேன்.