| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2446 | நான்முகன் திருவந்தாதி || ஸ்மர்தவ்யனான ஸ்ரீ எம்பெருமானுடைய நீர்மையாலே ஸ்ரீ பரம பத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார் அன்றிக்கே ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்- ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம் 65 | சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை மாதாய மாலவனை மாதவனை – யாதானும் வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத் தில்லையோ சொல்லீ ரிடம். | மாது ஆய,Maathu Aaya - அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும் மாலவனை,Maalavanai - (ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான மாதவனை,Maadhavanai - திருமாலைக் குறித்து சொல் மாலை,Sol Maalai - இச்சொல் தொடைகளை (சொல்லி) யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு,Yaadhanum Valla Aa Sindhiththu Iruppeerkku - ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்,Vaikundhaththu Idam Illaiyo Solliir - ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ? சொல்லீர்,Solliir - சொல்லுங்கள் சூது ஆவது,Soodhu Aavathu - இதுவே நமக்கு நல்லவாய்ப்பு என்று என் நெஞ்சத்து எண்ணினேன்,En Nenjaththu Enninain - என்மனத்தில் உறுதி கொண்டேன். |