Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2447 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2447நான்முகன் திருவந்தாதி || நான் ஸ்ரீ எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன் அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்- 66
இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்கு,- திடமாக
வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம்.
பண்டு,Pandhu - என்னைத் திருத்திப்பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு,Padam Naaga Anai Nedhiya Maarku - படங்களையுடைய சேஷசயனத்தில் பள்ளிகொண்டருள்பவனாயிருந்த ஸர்வெச்வரனுக்கு
இன்று,Indru - இப்போது முதலாக
எல்லாம்,Ellam - மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது,Idam Aavathu - வாஸஸ்தானமாவது
என் நெஞ்சம்,En Nenjam - எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு,Mathi Soodi Thannodu - பிறைச்சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்
அயனை,Ayanai - பிரமனையும்
திடம் ஆக,Thidam Aaga - பரம்பொருளாக
வையேன்,Vaiyen - மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்,Vaiyen Naan - (த்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்,Aal Seyyen - (அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன் (இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்,Valam - (திருமாலின் பரிக்ஹமாயிருக்கப்பெற்ற) மிடுக்கேயாம்.