| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2447 | நான்முகன் திருவந்தாதி || நான் ஸ்ரீ எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன் அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்- 66 | இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு படநா கணைநெடிய மாற்கு,- திடமாக வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான் வையேனாட் செய்யேன் வலம். | பண்டு,Pandhu - என்னைத் திருத்திப்பணி கொள்வதற்கு முன்பு படம் நாக அணை நெடிய மாற்கு,Padam Naaga Anai Nedhiya Maarku - படங்களையுடைய சேஷசயனத்தில் பள்ளிகொண்டருள்பவனாயிருந்த ஸர்வெச்வரனுக்கு இன்று,Indru - இப்போது முதலாக எல்லாம்,Ellam - மேலுள்ள காலமெல்லாம் இடம் ஆவது,Idam Aavathu - வாஸஸ்தானமாவது என் நெஞ்சம்,En Nenjam - எனது நெஞ்சமாகும் மதி சூடி தன்னோடு,Mathi Soodi Thannodu - பிறைச்சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும் அயனை,Ayanai - பிரமனையும் திடம் ஆக,Thidam Aaga - பரம்பொருளாக வையேன்,Vaiyen - மனத்திற்கொள்ள மாட்டேன் வையேன் நான்,Vaiyen Naan - (த்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான் ஆள் செய்யேன்,Aal Seyyen - (அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன் (இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்) வலம்,Valam - (திருமாலின் பரிக்ஹமாயிருக்கப்பெற்ற) மிடுக்கேயாம். |