திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2448 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2448நான்முகன் திருவந்தாதி || நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை – பஹூ குணனான ஸ்ரீ எம்பெருமானுடைய திரு நாமங்களை ஏத்துகையே உத்தேச்யம் -என்கிறார் – நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இறே என்கிறார் ஆகவுமாம் – இங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து- ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் – இவை அன்று உத்தேச்யம்-அவனை ஏத்துகையே உத்தேச்யம் 67
வலமாக மாட்டாமை தானாக, வைகல் குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை, சீரணனை யேத்தும் திறம்.
பதவுரை Show / Hide
நாரணைனை,Naaranainai - ஸ்ரீமந் நாராயணனாய்
நாபதியை,Naapathiyai - (என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை,Gnanam Perumaanai - அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்,Vaikal Nalam Aaga Aethum Thiram - எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக,Valam Aaga - நன்மைதருவதாகிலுமாகுக
சீர்அணனை,Seeranai - நற்குணங்களை பொருந்தியிருக்கப்பெற்றவனான ஸர்வேச்வரனை
மாட்டாமை தான் ஆக,Maattaamai Thaan Aaga - நன்மைதரமாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக,Kulam Aaga - நற்குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக,Kuttram Thaan Aaga - கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்)