| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2448 | நான்முகன் திருவந்தாதி || நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை – பஹூ குணனான ஸ்ரீ எம்பெருமானுடைய திரு நாமங்களை ஏத்துகையே உத்தேச்யம் -என்கிறார் – நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இறே என்கிறார் ஆகவுமாம் – இங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து- ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் – இவை அன்று உத்தேச்யம்-அவனை ஏத்துகையே உத்தேச்யம் 67 | வலமாக மாட்டாமை தானாக, வைகல் குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை, சீரணனை யேத்தும் திறம். | நாரணைனை,Naaranainai - ஸ்ரீமந் நாராயணனாய் நாபதியை,Naapathiyai - (என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய் ஞானம் பெருமானை,Gnanam Perumaanai - அறிவிற்பெயரியவனாய் வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்,Vaikal Nalam Aaga Aethum Thiram - எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த வலம் ஆக,Valam Aaga - நன்மைதருவதாகிலுமாகுக சீர்அணனை,Seeranai - நற்குணங்களை பொருந்தியிருக்கப்பெற்றவனான ஸர்வேச்வரனை மாட்டாமை தான் ஆக,Maattaamai Thaan Aaga - நன்மைதரமாட்டாதாகிலுமாகுக, குலம் ஆக,Kulam Aaga - நற்குலத்தைத் தருவதாகிலுமாகுக குற்றம் தான் ஆக,Kuttram Thaan Aaga - கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்) |