| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2449 | நான்முகன் திருவந்தாதி || யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார் – அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே-பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது- 68 | திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு. | நமனும்,Namanum - யமனும் தன் தூதுவரை,Than Thoodhuvarai - தனது சேவகர்களை கூவி,Koovi - அழைத்து செவிக்கு,Sevikku - (அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்) திருவடி தன்,Thiruvadi Than - ஸர்வேச்வரனுடைய நாமம்,Naamam - திருநாமத்தை மறந்தும்,Marandhum - மறந்தொழிந்தாலும் புறம் தொழாமாந்தர்,Puram Thozhaamanthar - தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்) திறம்பெல் மின் கண்டீர்,Thirampel Min Kandheer - (ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா இறைஞ்சி,Irainji - வணங்கி சாதுவர் ஆய்போதுமின்கள் என்றான்,Saadhuvaar Aaypodhuminngal Endraan - (கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திகக்கடவீர்கள் என்று சொன்னான். |